ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுக்கும் இடையே யார் பெரியவர்? என கேள்வி வர இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் தன் அடிமுடியை பார்க்க முடியாத வகையில் ஜோதியாக உருவெடுத்தார். இப்போது இருவரில் யாருக்கு என் அடியோ, முடியோ கண்ணுக்கு புலப்படுகிறதோ அவர் தான் பெரியவர் என்றாராம். பிரம்மன் அன்னப் பறவையாகவும், விஷ்ணு, வராக உருவெடுத்தும் அடியைக் காண விரைந்தனர். ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அவர்களால் சிவனின் அடியோ, முடியோ காணவேமுடியவில்லை. அப்போது சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவிடம் பிரம்மன், தான் சிவனின் முடியை கண்டதாக பொய்சாட்சி கூற கேட்டிருக்கிறார். அதற்கு இசைந்து தாழம்பூவும் பொய் கூற, சிவனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. இதனால் பிரம்மனுக்கு பூவுலகில் வழிபாடு நடக்காது எனவும், தன் பூஜையில் தாழம்பூவே இருக்கக் கூடாது எனவும் சாபம் கொடுத்தாராம். மறந்தும் நீங்கள் பூஜையில் தாழம்பூ வைக்கவேண்டாம்.