அக்டோபர் 24, 2025 வெள்ளிக்கிழமை, கந்த சஷ்டியின் மூன்றாவது நாள் விரதம் நடைபெறுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் “ஓம் சரவண பவ” மந்திரத்தை 108 முறை ஜபம் செய்ய வேண்டும். கலசத்தில் புதிய பூவைச் சமர்ப்பித்து, சட்கோணக் கோலம் போடுவது அவசியம். இன்று “வ” என்ற எழுத்தின் மீது மூன்று விளக்குகளை ஏற்றி முருகனை வழிபட வேண்டும்.
சட்கோணம் என்பது முருகனின் தெய்வீக யந்திரமாகக் கருதப்படுகிறது. அதில் விளக்கேற்றி வழிபட்டால் எதிரிகள் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும். எதை நினைத்து வழிபடுகிறோமோ, அது நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சஷ்டி நாட்களில் மட்டுமின்றி, முருகனுக்குரிய பிற திருநாள்களிலும் இம்மாதிரியான வழிபாடு பலமடங்கு பலனை தரும். தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த ஆற்றல் தரும். உபவாசம் இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்