Kandha Sashti Viratham: கந்தசஷ்டி - 6 நாட்களும் விரதம் இருக்க முடியலையா?! முருகன் அருள் பெற இப்படி செய்யலாம்.!

Published : Oct 22, 2025, 06:15 AM IST

2025-ஆம் ஆண்டு மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது. ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளைப் பெற முடியாதவர்கள், முதல் மற்றும் ஆறாவது நாள் விரதமிருந்தும் அல்லது தினசரி வழிபாடு செய்தும் முழு பலன்களையும் பெறலாம். 

PREV
14
தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் கிடைக்கும்

மகா கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு முக்கியமான திருவிழாவாக நடக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இந்த விழா அக்டோபர் 22, புதன்கிழமை அன்று துவங்குகிறது. ஐப்பசி மாதம் பிரதமை திதியிலிருந்து அக்டோபர் 27, திங்கட்கிழமை சூரசம்ஹாரம் வரை விரதமும் திருவிழாவும் நடைபெறும். ஐதீகப்படி, ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபட்டால், முருகப்பெருமானின் அருளும், தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் பெறப்படும் என நம்பப்படுகிறது.

24
அருளை அள்ளிக்கொடுக்கும் ஆறுமுகன்

சிலர் பல காரணங்களால் முழு ஆறு நாட்களும் விரதம் முடியாமல் இருக்கும். அவர்களுக்கான வசதி முறையும் உள்ளது. விரதம் முடியாதவர்கள் மகா கந்த சஷ்டி தொடங்கி முதல்நாள் மற்றும் ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் விரதம் கடைபிடித்து முருகப்பெருமான் வழிபடலாம். மற்ற நாட்களில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் முருகப்பெருமான் படத்திற்கு விளக்கேற்றி, அவருக்கான பாடல்கள் பாடி, கவசங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

34
திருமணம் நடைபெறும் வரை திருவிழா

ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏழாவது நாளில் முருகப்பெருமான் மற்றும் தேவானையின் திருமணம் நடைபெறும் வரை திருவிழா நீடிக்கும். இதனால் விரதம் இருக்க முடியாத நாட்களிலும், தேவையான வழிபாடு மற்றும் தர்மம் பூர்த்தியாக நடைபெறுகிறது.

44
பக்தர்கள் வசதிற்கு ஏற்ற விரதம்

பொதுவாக, கந்த சஷ்டி விரதம் 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது 6 நாட்கள் விரதம் என பக்தர்களின் வசதிக்கேற்ப கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் 6 நாட்கள் விரதம் முடியாதவர்கள் மேற்கண்ட வழிகளை பின்பற்றுவதால், தங்கள் விரதமும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். இதனால், அனைவரும் விரதத்தை தங்கள் வசதிக்கேற்ப அனுஷ்டித்து, ஆன்மிகச் சாந்தியும், ஆன்மீக வளர்ச்சியும் பெற முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories