Benefits of Wearing Jasmine Flowers in Hair for Women : பெண்கள் தலையில் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதால் பலவித நன்மைகள் கிடைக்குமாம். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ் கலாச்சாரத்தில் மல்லிகை பூவுக்கு என்று தனி இடம் உண்டு திருமணம் சுப நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளிலும் மல்லிகைப்பூ தவறாமல் இடம்பெற்று விடும். மல்லிகை பூவுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் அழகு சார்ந்தது மட்டுமல்ல. அது கலாச்சாரம், அறிவியல் மற்றும் மனநலம் சார்ந்த பல நன்மைகளை உள்ளடக்கியது. இரவு நேரத்தில் பெண்கள் மல்லிகை பூ அணிவதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக இங்கே காணலாம்.
26
1. மன அழுத்தத்தைக் குறைக்கும் நறுமணம்
மல்லிகை பூவில் உள்ள இயற்கையான நறுமணம் மனித மூளையில் அமைதியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தூண்டுகிறது. பகல் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் பெண்களுக்கு, மல்லிகையின் மணம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை லேசாக்குகிறது. இது ‘செரோடோனின்’ போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, பதற்றத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
36
2. ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்
இரவில் மல்லிகை பூவை தலையில் வைத்துக்கொள்வது அல்லது படுக்கைக்கு அருகில் வைத்திருப்பது தூக்கமின்மை பிரச்சனையைத் தீர்க்கும். இதன் மணம் ஒரு இயற்கை மயக்க மருந்து போலச் செயல்பட்டு, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இதனால் இரவு நேரத்தில் ஆழ்ந்த மற்றும் அமைதியான உறக்கம் கிடைக்கிறது.
ஆயுர்வேதத்தின் படி, மல்லிகைக்கு உடல் சூட்டைத் தணிக்கும் குணம் உண்டு. பெண்கள் தலையில் மல்லிகை அணிவதால் உச்சந்தலை குளிர்ச்சியடைந்து, உடல் சூடு சீராக பராமரிக்கப்படுகிறது. மல்லிகை மணத்திற்கு பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளைச் சீர்செய்யும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது, இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
56
4. கணவன் - மனைவி இடையிலான நெருக்கம்
மல்லிகை பூ ஒரு சிறந்த உணர்ச்சியைத் தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் இரவில் மல்லிகை பூ அணிவது தம்பதியரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். இது நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, அறையில் ஒரு இனிமையான சூழலை ஏற்படுத்துகிறது.
66
5. ஆன்மீகம் மற்றும் மங்கலச் சின்னம்
தமிழ் பண்பாட்டில் மல்லிகை பூ மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இரவில் மல்லிகை சூடுவது ஒருவித நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. இது பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், ஒருவித தெய்வீகப் பொலிவையும் அளிக்கிறது.
முக்கிய குறிப்பு:
இயற்கையான மல்லிகை பூக்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. வாசனை திரவியங்கள் அல்லது செயற்கை மணம் கொண்ட பிளாஸ்டிக் பூக்களால் இந்த பலன்கள் கிடைக்காது.