செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை துடைக்கவே கூடாது. பிற நாட்களில் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும் தண்ணீரில் கைப்பிடி கல்உப்பு கலந்து துடைத்தால் உங்கள் வீட்டில் விழுந்த கண் திருஷ்டி விலகும். வீட்டு பூஜை அறையில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். கிழக்கு முகமாக குத்துவிளக்கும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருப்பது அவசியம். வீட்டு பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது இரண்டு திரிகள் போட்டு ஏற்ற வேண்டும். இதனால் செல்வம் ஈர்க்கப்படும்.