ஒவ்வொரு காரியங்களை செய்வதற்கும் நல்ல நாள், நல்ல நேரம் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தங்க நகைகள் வாங்கும் நேரம், அவற்றை அடகு வைக்கும் நேரம் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தது. சில நேரங்களில் அதை செய்தால் மட்டுமே வீட்டில் தங்கம் மேலும் பெருகும். கடனை அடைக்கும் போது கூட நாம் நல்ல நேரம் பார்த்து தான் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். நாம் ராகு காலம், எமகண்டம் நேரங்களில் எப்படி சில நல்ல காரியங்களை தவிர்க்கிறோமோ, அப்படி தான் குளிகை நேரமும்.