தீபாவளி அன்று பூஜை செய்ய முடியாதவர்கள் இதை மட்டும் செய்தால் போதும்..மகாலட்சுமியின் அருளால் கோடீஸ்வரராக மாறலாம்

First Published Oct 23, 2022, 2:11 PM IST

Diwali lakshmi poojai 2022: தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜைக்கு இணையான ஒரு சின்ன வழிபாட்டு முறை செய்தால், உங்களுக்கு மஹாலட்சுமி சிறப்பான ஆசீர்வாதம் தருவார். அது என்ன பரிகாரம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோம். 

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இதனால், செல்வ வளம் பெருகும், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், எல்லோராலும் இந்த லட்சுமி குபேர பூஜையை தீபாவளி அன்று வீட்டில் செய்ய முடியாது. 

மேலும் படிக்க ...தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..!

இருப்பினும் லட்சுமி தேவியின் அருள் ஆசியை முழுமையாக பரிபூரணமாக பெற லட்சுமி குபேர பூஜைக்கு இணையான ஒரு சின்ன வழிபாட்டு முறை செய்தால், உங்களுக்கு மஹாலட்சுமி சிறப்பான ஆசீர்வாதம் தருவார். அது என்ன பரிகாரம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோம். 

 நாளைய தினம் அதாவது அக்டோபர் 24 திங்கட்கிழமை அன்று அதிகாலை ஐந்து முதல் ஆறு மணிக்குள் இந்த பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக, அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை செய்வது பல மடங்கு பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க ...தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..!

இதற்கு முதலில், மகாலட்சுமியின் திரு உருவ படத்திற்கு முன்பாக, மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப்பூ, மல்லிப்பூ, போன்ற வாசனை மிகுந்த மலர்களை வைத்து  அலங்காகாரம் செய்து கொள்ளுங்கள். பின்னர், உப்பும், மஞ்சளும் வாங்கி திரு உருவ படத்திற்கு முன்பாக, வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பசும் நெய்யினால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, 108 நாணயங்களால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின்னர், இந்த காயினை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு பீரோ போன்ற பண புழக்கம் இருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். நெய் வேதியமாக பசும் பாலில் செய்த பாயாசம் வைக்கலாம். இந்த நாணயத்தை வைத்து, வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று கூட, மகாலட்சுமி தாய்க்கு அர்ச்சனை செய்வது நம்முடைய பண கஷ்டத்தை தீர்க்கும்.

இந்த பூஜையை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யலாம். 
 இதனால் செல்வ வளம் பெருகும். வறுமை நீங்கும். அடுத்த தீபாவளிக்கும் நீங்கள் பல மடங்கு உயரத்தில் இருப்பீர்கள். நிச்சயம் இந்த பூஜையை செய்து நீங்கள் பலன் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..!

click me!