வெள்ளி கிழமை
வெள்ளி கிழமை கருட தரிசனம் செய்ய, நோய், கடன், எதிரிகளின் சாபம், தொல்லைகள் நீங்க வழி பிறக்கும். கொடுத்த கடன் தொகைகள் திரும்பி வரும். சுக்கிர பகவான், ஒருவருடைய ஜாதகத்தில் 6, 8, 12-ம் இடங்களில் இருந்தாலும், நீச்ச நிலை, அஸ்தமனம், வக்கிரம், பாதகம் நிலையில் இருந்தாலும், வெள்ளி கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்.
சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்ன காரர்கள், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார வெள்ளிக்கிழமை கருட தரிசனம் செய்து வர வாழ்வில் முன்னேற்றத்தை பெறலாம்.