ஹோலி பண்டிகையன்று இதையெல்லாம் வீட்டிற்கு வாங்கி வந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

First Published Mar 8, 2023, 10:00 AM IST

ஹோலி பண்டிகையான இன்று எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் வீட்டில் தனலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதிலெயும் இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி வந்தால் பணப்பற்றாக்குறை வராது.
 

ஹோலி பண்டிகை

குளிர் காலத்தின் இறுதியாகவும், வசந்த காலத்தின் தொடக்கமாகவும் அமைவது தான் ஹோலி. இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் வண்ணமயமான பண்டிகையாக திகழ்வது இந்த ஹோலி பண்டிகை. இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வண்ணம் பூசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
 

ஹோலிகா தகனம்

ஹோலிகா தகனம் பிரதோஷ காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில்) பால் குணா பூர்ணிமா அன்று செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதியான நேற்று ஹோலிகா தகனம் செய்யப்பட்டது. மார்ச் 8 ஆம் தேதியான இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஹோலி பண்டிகையன்று வீட்டிற்கு இவற்றையெல்லாம் வாங்கி வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். அப்படி என்னென்ன வாங்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க...
 

வெள்ளி நாணயம்:

ஹோலி பண்டிகை அன்று வெள்ளி நாணயத்தை வாங்கி வரலாம். அப்படி வாங்க வந்த வெள்ளி நாணயத்திற்கு மஞ்சள் தடவி மஞ்சள் நிற துணியில் சுற்றி, பணப்பெட்டியிலோ அல்லது வீட்டு பீரோவிலோ வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பணப்பற்றாக்குறை தீர்ந்து கை மேல் காசு வரும்.
 

மா இலை அல்லது அசோக இலை:

ஹோலிகா தகனத்தன்று வீட்டின் முன்பு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஏனென்றால், லட்சுமி தேவியானவள் வீட்டின் வாசல் படி வழியாகத்தா உள்ளே வருவாள். வீட்டின் கதவை நன்கு சுத்தம் செய்து அசோக இலை தோரணம் கட்ட வேண்டும்.

ஆமை:

வாஸ்து படி ஹோலி பண்டிகை அன்று ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி கொண்டு வரலாம். இந்த ஆமையின் பின்புறம் ஸ்ரீ யந்திரம் மற்றும் குபேர யந்திரம் இருக்க வேண்டும். மறுபுறம், ஆமை வடக்கு நோக்கி நிறுவப்பட வேண்டும். ஆமை விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. விஷ்ணு இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.

மூங்கில் செடி:

ஹோலி பண்டிகைக்கு மூங்கில் செடி வாங்கி வர வேண்டும். ஏனென்றால், மூங்கில் மரம் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி வாங்கி வரும் மூங்கில் செடியை வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். ஆனால் அதில் ஏழு அல்லது பதினொரு குச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூங்கில் செடி இருந்தால் வீட்டில் பணம் மற்றும் தானியங்களுக்கு பஞ்சம் வராது.
 

click me!