மந்திரங்கள் இப்போது தமிழில் வந்துவிட்டாலும், சித்தர்கள் வடமொழியில் மந்திரங்களை உச்சரித்தனர். வடமொழியை பொறுத்தவரையில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு, ‘குரு' என்ற வார்த்தையில் ‘கு'என்ற எழுத்து இருளையும், 'ரு' என்ற எழுத்து அழித்தல் என்றும் பொருள்படும்.
இவ்வாறாக அறியாமையை அழிப்பவன் குருவாகிறான். அதேபோன்று 'நான்' என்ற வார்த்தையை 'அஹம்' என்று குறிப்பிடுவார்கள். இதில் 'அ' என்பது இறைவனையும் 'ஹ'என்பது மாயையும் குறிக்கிறது. மனிதற்குள் மறைந்திற்கும் இறைத்தன்மையையும் மாயை மறைக்கிறது என்று கூறலாம். இதுபோன்று மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடைய முடியும். இதில் முக்கியத்துவம் வாய்ந்தது மந்திரத்தைபயன்படுவதைக் காட்டிலும் அதனை பயன்படுத்தும்விதம் மற்றும் பயிற்சி போன்றவை தான்.