இந்த 3 விதை போதும்! 60 வயசானாலும் உங்க அம்மா ஐயன் லேடியாக இருக்க உதவும்!

55 முதல் 60 வயதிற்கு பிறகு, உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்கு அவர்களின் உணவில் சில சிறப்பு விதைகளை சேர்க்க வேண்டும். 

these seeds helps for women good health at the age of after 55 in tamil mks

வயது அதிகரிக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பல பெற்றோர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. அத்தைகிருஷ்ணன் நிலையில் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது பிள்ளையாக நம்முடைய பொறுப்பு.

these seeds helps for women good health at the age of after 55 in tamil mks

முக்கியமாக வயது ஏறுகிற சுகர் டிபி மூட்டு வலி என பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். எனவே, இவற்றை தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், பல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். குறிப்பாக 55 முதல் 60 வயதிற்கு பிறகு, உங்கள் தாயின் உணவில் சில சிறப்பு விதைகளை சேர்க்க வேண்டும். 


இந்த ஆரோக்கியமான விதைகள், பல வகையான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும். அந்த முக்கியமான விதைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆளி விதைகள்: இந்த விதைகள் பெண்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த விதைகளில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது. எனவே, இவற்றை உண்பதால் உடலில் உள்ள இரத்த பற்றாக்குறை ஈடு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி இதை ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு இது மிகவும் நல்லது. ஆளி விதை ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தோல் மற்றும் முடியையும் பாதுகாக்கின்றன.

இதையும் படிங்க:  பெண்களே.. 40 வயசு தாண்டியாச்சா.. அப்ப இந்த 5 உடல்நல பிரச்சனைகளில் அலட்சியமாக இருக்காதீங்க...!

எள் விதைகள்: எழு விதைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான கால்சியம் உள்ளது. இது அவர்களின் எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் கீழ்வாதம் போன்ற அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க:  ஆபத்து...ஆபத்து!! 30 வயதிற்குப் பிறகு பெண்களைத் தாக்கும் கால்சியம் சத்துக் குறைபாடு.. அறிகுறிகள் இதோ!

வெந்தயம்: 55 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் வழக்கமான உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.  மேலும், இது சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குவது மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளைத்து சாப்பிடலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!