மலைகளால் சூழப்பட்ட மெக்கரை என்ற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம், கடந்த காலத்தில் நடந்த மர்ம சம்பவங்களையும் நிகழ்காலத்தில் தொடரும் அமானுஷ்யமான நிகழ்வுகளையும் இணைத்து சொல்லும் கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மெக்கரையில் நடைபெற்ற சில புதிரான சம்பவங்களின் தாக்கம், காலம் கடந்தும் அந்தக் கிராமத்தை விட்டு அகலவில்லை. இந்நிலையில், அங்குள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கிடைக்கும் ஒரு பழமையான புத்தகம் கதையின் போக்கையே மாற்றுகிறது.
அந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய மர்மம் என்னவென்றால், அதை ஒருவர் படிக்கத் தொடங்கியவுடன், அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதைவிட அதிர்ச்சியாக, அந்த நபரின் மரணம் எப்போது, யாரால், எந்த விதத்தில் நிகழும் என்பதும் முன்கூட்டியே புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு மெக்கரையில் நடந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? நிகழ்காலத்தில் அரங்கேறும் தொடர் மரணங்களின் பின்னணியிலும் இதே மர்மம் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை
Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ