செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே, ராணா டகுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் காந்தா. இப்படம் நவம்பர் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. “காந்தா” (Kaantha) திரைப்படம் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவூட்டும் வண்ணம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கதை, ஒரு பிரபல இயக்குநரையும், அவர் அறிமுகப்படுத்திய முன்னணி நடிகரையும் மையமாகக் கொண்டது. ஒருகாலத்தில் இருவரும் கலைக்காக ஒன்றாக உழைத்தவர்கள். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, ஆளுமை மோதல் - அதுவே “காந்தா”வின் கதைச்சுருக்கம்.
இந்த மோதலின் நடுவில் வருகிறார் ஒரு புதிய முகம் - ஒரு இளம் நடிகை. அவள் அவர்களின் வாழ்க்கையையும், கலை உலகத்தையும் முழுவதும் மாற்றி விடுகிறார்.