காதலைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இளைஞன் ஒருவன் அந்தக் காதலைக் கடைசியாக எப்படிப் புரிந்து கொள்கிறான் என்பதுதான் கதை. பள்ளியில் படிக்கும் நாயகன் கிஷன் தாஸ் ‘ விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தைப் பார்க்க நேர, பார்க்கும் எல்லாப் பெண்களும் தன்னைக் காதலிப்பதாக உணர்கிறார்.
அப்படி வகுப்புத்தோழியிடம் காதல் வயப்பட்டுத் தோற்று, பின் கல்லூரித் தோழி, அதற்குப்பிறகான தோழியைக் காதலித்து, அவள் திருமணத்தில் கலாட்டா செய்து காவல் நிலையம் போய்; கடைசியாக அப்பா சொல்படி ஒரு திருமண தகவல் மையத்தில் வேலைக்குப் போகிறார்.
அங்கே மேலாளராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவை வழக்கம் போல் காதலிக்க ஆரம்பித்து, ஆனால், கடுமையான அனுபவம் பெறுகிறார். அந்தக் காதல் என்ன ஆனது, கடைசியில் காதல் என்றால் என்ன என்பதை கிஷன் தாஸ் புரிந்து கொண்டாரா என்பதே மீதிக்கதை.