எழுதி வைத்துக்கொள்ளுங்கள் விஜய். புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கிய சாமி இருவரும் உங்களுடன் இருக்கும் வரை உங்களால் வெற்றிப்பெற முடியாது. இவர்களை நம்பி 33 வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயரும், புகழும், பணமும், தமிழ்நாட்டு மக்களின் செல்வாக்கையும் இழந்துவிடாதீர்கள்.
புஸ்ஸி ஆனந்த் இரண்டாம் கட்ட தலைவர்களை வளர விடாமல் கட்சிக்குள் தனக்கென ஆதரவாளர்களை வைத்துள்ளார். இவர் பொதுச்செயலாளராக தொடர்ந்தால் கட்சி வலுவடையாது. ஆளுமை, அதிகாரம், பொது அறிவு உடைய பொதுச்செயலாளர் தேவை. தவெக கட்சியோட ஒரிஜினல் தலைவரே புஸ்ஸி ஆனந்த் தான். புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தொண்டர்களை வைத்து அரசியல் செய்வது விஜய்க்கு கெட்ட பெயரையே உருவாக்கும்’’ எனக் கொந்தளித்து வருகிறார்கள்.
‘‘கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை வைப்போம். தேவையற்ற சண்டைகள், நமது பலவீனத்தையே வெளிக்காட்டும். புஸ்ஸி ஆனந்த், நமது இயக்கத்தின் அடையாளம். நம் குடும்ப விஷயத்தை, அடுத்தவர் பஞ்சாயத்து செய்ய அனுமதிக்க வேண்டாம். புஸ்ஸி ஆனந்த், ஒரு தூணாக இருக்கிறார். நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்’’ என சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.