தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள தவெக பெரும் அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்ப உறவுகளின் சமரசமும், சங்கீதாவின் அரசியல் வருகையும் ஆளுங்கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆளுங்கட்சிக்குச் சவால் விடும் வகையில் வளர்ந்து வரும் நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளும், அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளன. "விஜய்க்காக அவரது குடும்பமே களம் இறங்குகிறது" என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
26
சங்கீதா அளித்த புகார்: பின்னணி என்ன?
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு குறித்த செய்திகள்தான். சுமார் 26 ஆண்டு கால திருமண வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாக விஜய் தன்னிடம் காட்டிய அலட்சியம் மற்றும் ஒரு நடிகையுடனான தொடர்பு குறித்த புகார்களைச் சங்கீதா முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் தனிப்பட்ட விரிசல் விஜய்யின் அரசியல் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவரது எதிர்த்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
36
குடும்ப உறவுகளின் அதிரடி என்ட்ரி.!
சமரசப் பேச்சுவார்த்தை விஜய் மற்றும் சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைச் சரிசெய்ய விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோர் தீவிரமாக முயன்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் தங்களது பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சஞ்சய் தனது தாய்க்கு ஆதரவாக இருந்தாலும், குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.
பிள்ளைகளின் அன்பு மற்றும் பெரியவர்களின் அறிவுரை காரணமாக சங்கீதா தனது முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இதனால் அவர் மீண்டும் விஜயுடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
56
வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா? அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
இந்தச் சமரச முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், சங்கீதா மீண்டும் விஜயுடன் இணைந்து தவெக-வின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கீதா மேடையேறி விஜய்க்காக வாக்கு சேகரித்தால், அது "குடும்பப் பிணைப்பு" கொண்ட தலைவர் என்ற பிம்பத்தை விஜய்க்கு வழங்கும். விஜய்யின் தனிப்பட்ட பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ய நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு, குடும்பத்தின் இந்த ஒன்று கூடல் ஒரு பெரிய பின்னடைவாக அமையும். சங்கீதா மற்றும் ஷோபா ஆகியோரின் வருகை பெண் வாக்காளர்களின் வாக்குகளை தவெக பக்கம் இழுக்க உதவும் ஒரு துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது.
66
தவெக தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.!
அரசியல் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், விஜய்க்கு அவரது குடும்பமே அரணாக நிற்பது தவெக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. சங்கீதா - விஜய் இடையிலான மனக்கசப்புகள் நீங்கி, அவர்கள் மீண்டும் இணைவது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு மிகப்பெரிய "பூஸ்ட்" ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் 2026 தேர்தல் களம், கொள்கை ரீதியாக மட்டுமல்லாமல், குடும்ப ஒற்றுமை ரீதியாகவும் விஜய்க்கு ஒரு வெற்றிகரமான களமாக அமைய வாய்ப்புள்ளது.