வைகோவின் மதுபான ஆலை..! செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து..! பகீர் கிளப்பும் மல்லை சத்யா..!

Published : Nov 17, 2025, 02:44 PM IST

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாங்கள் சென்னை அடையாறில் வரும் 20ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

PREV
14

"செங்கல்பட்டு மாவட்டத்தில் வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்து’’ என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

துரை வைகோ, கட்சி முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்குக் காரணம் மல்லை சத்யாவுடனான மோதல் கூறப்பட்டது. சமூக ஊடகங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் சரமாரி தாக்கிக் கொண்டனர். மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யா, "ஜனநாயகமாக வாக்கெடுப்பு நடத்தி என்னை நீக்குங்கள்" என்று வெளிப்படையாகக் கூறினார்.

24

குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மகனுக்கு பொறுப்பு வழங்குவதற்காக என்னை துரோகியாகக் கருதுகிறார் என மல்லை சத்யா விமர்சித்தார். "வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றினேன். ஆனால் மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் சூட்டுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

மோதல் உச்சத்தை அடைந்து, "கைவிடப்பட்டவர்களே வாருங்கள்" என்று வைகோவை கண்டித்து மல்லை சத்யா, உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.மறுமலர்ச்சி திமுக மகன் திமுகவாக சுருங்கியது" என்று விமர்சித்தார். துரை வைகோ ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டாலும், மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மல்லை சத்தியா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்தியா, ‘‘செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது.அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதை வைத்து தான் இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார்.

34

ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார் வைகோ. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டியுள்ளார்.  அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தினார்.

வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. வைகோ உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார்.

துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார் வைகோ. ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ. 1998ல் மதிமுகவுக்கு நாடாளுமன்ற வாசலைத் திறந்து வைத்தது அதிமுக தான். அதிமுகவுடனான கூட்டணி தர்மத்தை மீறி வாஜ்பாய் அரசுக்கு தார்மீக ஆதரவு தந்ததால் அதிமுகவின் கோபத்தைப் பெற்றது.

44

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. அதை இப்போது சொல்ல முடியாது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ என்ற விமர்சனம் சரியானது. மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாங்கள் சென்னை அடையாறில் வரும் 20ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories