திமுகவை நாலாபுறமும் குத்தியது காங்கிரஸ்தான்..! கலைஞர் குடும்பம் அடைந்த வேதனைகள் தெரியுமா..? புட்டுப் புட்டு வைத்த ஜோதிடர் ஷெல்வி..!

Published : Nov 17, 2025, 01:22 PM IST

ங்கே ஒரு குத்து, இங்கே ஒரு குத்து என வாங்கி விட்டு அய்யோ குத்துகிறார்களே என கதறியது திமுக குடும்பம். அப்படி வேதனைப்படுத்திய காங்கிரஸ் கட்சி உங்கள் நண்பன். எதுவுமே செய்யாத பாஜக அவர்களுக்கு விரோதியா?

PREV
14

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், பாஜக அதிமுக இடையேயான கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்குப் பின் மீண்டும் உருவானது. இது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்படுவதற்காக முக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது. ஆனால், திமுக இந்தக் கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, இதை தோல்விக் கூட்டணி என்று கூறி, சமூகவாதக் கொள்கைக்கு எதிரானது, தமிழ் அடையாளத்தை அழிக்கும் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி தோல்விக் கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் இதை மீண்டும் தோற்கடிக்க வேண்டும்" என்று முழங்கி வருகிறார். பாஜகவின் மதவாதக் கொள்கைகள் அதிமுகவை பலவீனப்படுத்தும்.

இந்தக் கூட்டணி சிறுபான்மை வாக்குகளை இழக்கும் என்று திமுக கூட்டணியினர் விமர்சித்து வருகின்றனர்.

24

‘‘வாழ்க்கை முழுவதும் காங்கிரஸ்காரர்கள் திமுகவுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் காங்கிரஸ்காரர்களுடன் கூட்டணி வைத்தால் நியாயம். ஆனால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்தால் குற்றமா? இப்படிச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எதார்த்த ஜோதிடர் என அழைக்கப்படும் ஷெல்வி.

இதுகுறித்து விளக்கியுள்ள அவர், ‘‘காங்கிரஸ் கட்சிக்காரர்களால் கலைஞர் குடும்பம் அனுபவித்த துன்பம் உங்களுக்கு தெரியுமா? நான் எல்லாக் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பன். கனிமொழி கைது செய்யப்பட்டபோது கலைஞர் டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் உட்கார்ந்து பட்ட வேதனை தெரியுமா? அந்த ராஜாத்தி அம்மாள் பட்ட வேதனை தெரியுமா? மக்களுக்கு நியாய தர்மங்கள் தெரிய வேண்டும். 2ஜி என்று ஒரு வழக்கு. அந்த சமயத்தில் சுப்ரீம் கோர்ட் தான் வழிநடத்துகிறது எனக்கூறியது காங்கிரஸின் மத்திய அரசு. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இருந்தாலும் அந்த வழக்கை நடத்தும் உரிமை சிபிஐ வசம் இருந்தது.

34

சிபிஐ ஒரு ஃபைல் சரி பார்த்து ரிப்போர்ட் கொடுத்தது. அதில் எந்த ரெக்கவரியும் இல்லை என்று சொன்னார்கள். அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி மோசடி நடந்ததாக ரிப்போர்ட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அப்போடு நிதி அமைச்சராக ஒரு தமிழர் இருந்தார். உங்கள் உறவுக்காரர். காங்கிரஸ் உறவுக்காரர். அவர் எந்த ரிப்போர்ட்டையும் படித்து இருப்பார் இல்லையா? ஆ.ராஜாதான் அந்தத்துறைக்கு அமைச்சராக இருந்தார். அவர் மீது பலி போட்டால் பரவாயில்லை. அவர் அமைச்சராக இருந்தார். அதனால் வேறு விஷயம்.

ஆனால், எங்கேயோ இருந்த கனிமொழியை கூப்பிட்டு வந்து, கலைஞருக்கும் அந்த குடும்பத்திற்கும், ஸ்டாலினுக்கும் மற்ற எல்லோருக்கும் தூக்கத்தைக் கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? கனிமொழி எத்தனை நாட்கள் ஜெயிலில் இருந்தார் தெரியுமா? அந்த இடத்தில் ராஜாத்தி அம்மாவை போய் நான் பார்த்திருக்கிறேன். அந்த தாய் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார் தெரியுமா? அப்படி எல்லா வகையிலும் கஷ்டப்படுத்தியது காங்கிரஸ்.

44

இன்றைக்கு பாஜக அவர்களை நோண்டியதாதக் கூறுகிறார்கள். இப்போது இந்த நாட்டைக் காப்பதற்கு பிரியங்கா வேண்டும், ராகுல் காந்தி வேண்டும் எனக் கெஞ்சுகிறார்கள் திமுகவினர். ஆனால், மோடியை விரோதி என்கிறீர்கள். காங்கிரஸ்காரர்கள் திமுகவை எல்லாப்பக்கங்களிலும் குத்தினார்கள். அந்த பக்கம் ரைட்டில் குத்தினார்கள் சிதம்பரம். லெப்டில் குத்தினார் சோனியா காந்தி. நடுவில் குத்தினார் மன்மோகன் சிங். கீழே குத்தினார் ராகுல் காந்தி. எல்லாப்பக்கமும் குத்தியது காங்கிரஸ் கட்சி. அங்கே ஒரு குத்து, இங்கே ஒரு குத்து என வாங்கி விட்டு அய்யோ குத்துகிறார்களே என கதறியது திமுக குடும்பம்.

அப்படி வேதனைப்படுத்திய காங்கிரஸ் கட்சி உங்கள் நண்பன். எதுவுமே செய்யாத பாஜக அவர்களுக்கு விரோதியா? நான் எங்கே இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் நியாயத்தை தான் பேசுவேன். வாழ்க்கை முழுவதும் காங்கிரஸ்காரர்கள் திமுகவுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் காங்கிரஸ்காரர்களுடன் கூட்டணி வைத்தால் நியாயம். ஆனால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்தால் குற்றமா? இப்படிச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கூறியுள்ளார் ஷெல்வி.

Read more Photos on
click me!

Recommended Stories