2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிக கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. பாமக தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூடணியில் உள்ளது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் எதுவும் வெல்லாததால், அக்கட்சி அதிமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது.
ராமதாஸ் 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறி, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்தார். அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள். தேமுதிக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. தேமுதிக அதிமுக கூட்டணியில் 10-15 சட்டமன்றத் தொகுதிகளை கோரி பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராஜ்யசபா சீட்டும் கேட்டு வருகிறது. ஆனால், பாமக சேர்வதால் சீட் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.