நடந்து முடிந்த ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66 575 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தின் தோல்வியை ஒருபோதும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.