கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அதில் 40 பேரில் குடும்பத்தினருக்கு திருமண மண்டபம் ஒன்றில் வைத்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார் விசிக தலைவர் திருமாவளவன். முன்கூட்டியே அதற்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பத்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், முகநூல் மூலம் மீண்டும் வீடியோ வெளியிட்டு இருக்கும் திருமாவளவன், நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று நிர்வாகிகள் அப்படியே இருந்து விடக்கூடாது என்றும் நிவாரணமாக வழங்கிய காசுகள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிடாமல் இருக்க கட்சியின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.