விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!

Published : Dec 08, 2025, 10:55 AM IST

பெரும்பான்மையான நிர்வாகிகள்  திமுக கூட்டணி வேண்டாம். தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளனர். பிரவின் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தரப்பு கருதுகிறது.

PREV
14

த.வெ.க தலைவர் விஜயை சந்தித்து பேசிய காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காங்கிரஸில் உள்ள தி.மு.க. ஆதரவு கோஷ்டி தலைவர்கள் தெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில், கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு சென்னை அறிவாலயத்தில். கடந்த 3ம் தேதி டிமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்துப் பேசியது.

அப்போது, ஆட்சியில் பங்கு, காங்கிரசுக்கு 39 தொகுதிகள் கேட்டு இது குறித்து டிசம்பர் 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்' என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஐவர் குழு தெரிவித்தது. அதற்கு, இது குறித்து ராகுல் காந்தியிடம் பேசிக்கொள்கிறேன்' என ஸ்டாலின் கூறியுள்ளார். இதை கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார்.

24

இந்நிலையில், கடந்த 5ம் தேதி, தவெக தலைவர் விஜயை, பனையூர் இல்லத்தில் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவின் சக்ரவர்த்தி சந்தித்து தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, விஜயிடம், 125 தொகுதிகளின் பட்டியலை வழங்கி அதிலிருந்து 75 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அவரை விஜயிடம் அனுப்பியது ராகுல்காந்தி தான் என தமிழக காங்கிரசில் உள்ள விஜய் ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்திக்கு தெரியாது என திமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

விஜயை சந்திக்கும் முன், பிரவின் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ‘மற்ற கட்சிகள் கட்சி நிகழ்ச்சிக்கும், பேரணிக்கும் ஆட்களை திரட்ட வேண்டி இருக்கிறது. தவெக நிலைமை, நேர் மாறாக இருக்கிறது. அதிகக் கூட்டம் கூடுவதால், அதை குறைப்பதே அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது’ எனடத தெரிவித்து இருந்தார் குறிப்பிட்டிருந்தார்.

34

தவெகவை, பிரவீன் சக்கரவர்த்தி இப்படி பாராட்டியதை திமுக தலைமை ரசிக்கவில்லை. விஜயை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட் போது, 'எனக்கு எதுவும் தெரியாது. இந்தியா கூட்டணி இரும்புக் கோட்டையாக உள்ளது. எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களின் வாரிசுகளுக்கும், ஆதரவாளர்களுக்கு சீட் வாங்க விரும்புகின்றனர். சிலர், ஆளுங்கட்சியிடம் தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துள்ளதால் திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகின்றனர்.

44

ஆனால், பெரும்பான்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுக கூட்டணி வேண்டாம். தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளனர். பிரவின் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தரப்பு கருதுகிறது. எனவே இன்று நடக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவது குறித்தும், பிரவீன் சர்க்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியை டொடரல்காம் என தெரிவிப்பது குறிடததும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உள்ள திமுக ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர் டெல்லி மேடத்தில் பிரவீன் சர்க்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். பிரவீன் சர்க்கவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரலாம். இல்லாவிட்டால் தவெக- காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது’’ என்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories