பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
undefined
இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய வசதிகளுடன் கூடிய அர்ஜுன் மாக் 1ஏ டாங்க் வாகனத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
undefined
அர்ஜுன் மாக் 1ஏ பீரங்கி ராணுவ டாங்க் முன் நின்று பிரதமர்மோடி புகைப்படம் எடுத்து கொண்டார்.
undefined
பின்னர் நேரு உள்விளையாட்டு அங்கத்திற்கு வந்த, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கபட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செய்தார்.
undefined
நினைவு பரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணர் சிலை வழங்கினார்.
undefined
அவரை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், நினைவு பரிசாக தர்ஷணாமூர்த்தி சிலையை வழங்கிய பின்னர் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி நிரல்கள் துடங்கியது.
undefined