மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனை சமீபத்தில் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி இருவரும் டெல்லியில் சந்தித்து பேசினர். திமுக முக்கியமான அமைச்சர்கள் குறித்து சில முக்கிய பைல்ஸை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது ஆக்சன் எடுத்தால்தான் அது தேர்தல் நேரத்தில் நமக்கு உதவியாக இருக்கும் எனக்க்கூறி இருக்கிறார்கள். என்.டி.ஏ கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விரைவில் மத்திய அமைச்சரான, தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயில் வரவிருக்கிறார். அதன் பிறகு தொகுதி பங்கீடு சம்பந்தமாக சில விஷயங்கள் பேசலாம் என்று கூறி அனுப்பி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றதன் பின்னனியில் வேறொரு ரகசியமும் இருக்கிறது என்கிறார்கள். எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர் முறைகேடு வழக்கு இருக்கிறது.