ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!

Published : Dec 22, 2025, 02:34 PM IST

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறை மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீண்டும் தன்னுடைய பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.

PREV
14

நாம அரசியலுக்கு வந்ததும் கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மத்தவங்களோட நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும்’ என்கிறார் தவெக தலைவர் விஜய் விஜய்.

விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' என்கிற அளவுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' என அரசியல் டச்சோடு பேசி முடித்திருக்கிறார். 31 சதவிகிதம் அளவுக்கு தவெகவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறி வந்தாலும், குறைந்தபட்சமாக 20 சதவிகித வாக்குகளாவது தங்களுக்கு கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20% சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்கும எனவும் நம்புகிறார்கள். காரணம், விஜய்யே ஒரு கிறிஸ்தவர், சிறுபான்மையினர்.

24

ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் அமைடியாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் அவர் எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வக்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் பேசவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறை மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீண்டும் தன்னுடைய பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. முதல்வர் தலைமையில் ஒரு மெகா கிறிஸ்துமஸ் விழாவையும் திட்டமிட்டு திருநெல்வேலியில் சிறப்பாக நடத்தி முடித்தனர். விஜய் திமுகவையே பிரதானமாக எதிர்க்கிறார். திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளையே அவரும் குறிவைக்கிறார். ஆனால், அந்த வாக்குகளைப் பெற விஜய் தரப்பு பெரிதாக வியூகங்களை வகுக்கவில்லை.

34

தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த விவகாரத்தில் அமைதியாகவே இருந்தால் திமுக விஜய்யை பாஜகவின் பி டீம் என முன்வைத்து குற்றம்சாட்டுவார்கள் என்கிற அச்சமும், அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்பதையும் விஜய்யின் வியூக தரப்பு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் திமுக திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழா நடத்திய அடுத்த நாளே கிறிஸ்துமஸ் விழாவுக்கு அழைப்பு விடுத்து, வேகவேகமாக நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.

44

மாமல்லபுரம் விழாவில் பேசிய அவர், ‘‘சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு ஒரு இளைஞனை பாழுங்கிணற்றில் தள்ளினார்கள். அதில் இருந்து மீண்டு வந்த அந்த இளைஞன் ஜோசப் நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களுக்கு மட்டுமல்லாது நாட்டையே காப்பாற்றினார். கடவுளின் அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பும், அதீத வலிமையும், அதற்கான உழைப்பும் இருந்தால் எப்படிப்பட்ட போரையும் வெல்லலாம் என்பதை இந்த கதை உணர்த்துகிறது. கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories