அம்மாவுடைய அரசு அந்த பொங்கல் கொடுக்கின்ற பொழுது அதோட குடும்ப அட்டைக்கு 200 ரூபாய் நிதியும் கொடுத்தார். இது அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு அதை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த பொங்கல் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படும் என்று அறிவிப்பு இதுவரைக்கும் வழங்கவில்லை. நான் ஏற்கனவே எழுச்சி பயணத்தின் போது தெரிவித்தேன். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அந்த எழுச்சி பயண பொதுக் கூட்டத்தில் நான் தெரிவித்தேன். திமுக அரசால் இந்த ஏழை- எளிய மக்கள் தைப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத ஒரு சூழல் இருக்கிறது. இந்த ஆண்டு திமுக அரசுக்கு இறுதி ஆண்டு. இதற்கு மேல் ஆட்சிக்கு வரமாட்டார்கள்.
அதனால், இந்த ஆண்டு கொண்டாடுகிற விதமாக, மகிழ்ச்சி அடைகின்ற விதமாக, ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற விதமாக ₹5000 பொங்கல் தொகுப்பு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் முதலமைச்சரின் காலத்தில் திமுக எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 200 ரூபாய் கொடுத்தோம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தார்.