‘‘ ஏங்க எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தார்னு அதையே சொல்லிக் கொண்டு இருந்தால் போதுமா? எம்.ஜி.ஆர் உருவாக்கின கட்சியை விட்டு விட்டு, இரட்டை இலை இங்கே இருக்கிறது. கட்சி அலுவலகம் இங்கே இருக்கிறது. அவர் உருவாக்கின கொடி இங்கே இருக்கிறது. 9 தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பலமுறை அமைச்சராக இருந்தார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காக தனியாகவா ஓட்டுப்போட்டார்கள்? இரட்டை இலை சின்னத்தைப்பார்த்து மக்கள் ஓட்டுப்போட்டார்கள். புரட்சிட் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அடுத்து எடப்பாடியார்.
இதே எடப்பாடியாரை இவர் ஆஹா.. ஓஹோன்னு புகழ்ந்தாரே... நம்ம செங்கோட்டையனே புகழ்ந்தாரே... எதோ கோபத்தில் அவர் போகலாமா? எனக்கு எந்தக் கட்சியும் வேணாம்யா.. எந்த படதவியும் வேணாம்யா.. எம்.ஜி.ஆர் உருவாக்கின கட்சியில் இருப்பேன்டா
அப்படின்னு சொல்றவன் தான்டா ரோசமானவன். அவன் தான் மனுஷன். அவன் தான் உண்மையான அதிமுக ரத்தம். அவனிடம்தான் அதிமுக ரத்தம் ஓடுதுன்னு அர்த்தம். சும்மா எல்லாப்பேரும் அதிமுககாரன் கிடையாது.