உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!

Published : Dec 06, 2025, 02:45 PM IST

8 மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தினர், பட்டியல் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் 40 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகிக்கிறது.

PREV
14

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மத்திய உளவுத்துறை நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த சர்வேயின் முடிவுகள் திமுகவினருக்கு அதிர்ச்சியையும், விஜய் தலைமையிலான தவெக தொண்டர்களுக்கு குஷியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவெக தொண்டர்களை தற்குறிகள் என திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் சமூகவலைதளங்களில் ஏளனமாக வறுத்தெடுத்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் சட்டைசெய்யாத தவெக தரப்போ அதே சமூகவலைதளங்களில் திருப்படியத்து மக்களின் மனநிலையை தங்களுக்குச் சாதகமாக மாற்றி சத்தமில்லாமல் செல்வாக்கை அதிகரித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் விஜய்க்கு சுமார் 20 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது தங்களுக்கு 40 சதவீத அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

24

இந்த நிலையில் தமிழகத்தில், 234 தொகுதிகளில் எடுக்கப்பட்ட மத்திய உளவுத்துறை தரப்பில் இரண்டு கட்டமாக எடுக்கப்பட்ட சர்வேயில் திமுக கூட்டணிக்கு 90 இடங்களும், அதிமுக - பாஜ.க கூட்டணிக்கு 35 இடங்களும், தவெகவுக்கு 70 தொகுதிகளும் கிடைக்கலாம் என தெரிய வந்துள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் தவெகவுக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் மத்திய உளவுத்துறை சர்வே எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், திமுக கூட்டணி 90 தொகுதிகளில் வெற்றிபெற்று முதலிடம் வகிக்கிறது. 70 தொகுதிகளில், தவெக வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. நாதகவுக்கு ஒரு தொகுதியும், மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறியும் நீடிக்கும் எனக் கூறப்படுள்ளது.

34

திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தினர், பட்டியல் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் 40 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகிக்கிறது.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 முதல்நிலை மாநகராட்சிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், சிறுபான்மையினர், அருந்ததியர், பட்டியலின சமூகத்தவர்கள் அதிகமாக வசிக்கும் 15 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன. தெற்கே தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனுார், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தவெகவுக்கு கணிசமான அளவில் வாக்குகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

44

கொங்கு மண்டலத்தில் கரூர், கோவை மாவட்டங்களில், 5 தொகுதிகளில், தவெகவே வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி திமுக முதலிடம் வகிக்கிறது. அங்கு திமுகவுக்கு தவெக டஃப் கொடுக்கும் இழுபறி நிலை ஏற்படும் என சர்வேயில் தெரிய வந்துள்ளன. தென் மாவட்டங்களில் நாடார், தேவேந்திர குல வேளாளர் அதிகமாக உள்ள தொகுதிகளில், தவெகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதேவேளை முக்குலத்தோர், நாயுடு சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் தவெகவுக்கு சாதகமான சூழல் உள்ளது.

கிறிஸ்தவர்கள், மீனவர்கள் அதிகமாக வசிக்கும் கடலோர மாவட்டங்களில் குளச்சல், கிள்ளியூர், நாகப்பட்டினம், வேதராண்யம், துாத்துக்குடி போன்ற தொகுதிகளும், தவெகவுக்கு சாதகமாகவே உள்ளன. வட மாவட்டங்களில் தவெகவுக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்து தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories