ராமதாஸ் தொடங்கும் புதுக்கட்சி..! உருவாகிறது அய்யா பாமக..! 100 பேரிடம் பிரமாண பத்திரம்..!

Published : Nov 21, 2025, 01:04 PM IST

சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் பெயரில் இந்த புதுக் கட்சி தொடங்கப்படுகிறது. புதிய கட்சியை தொடங்க 100 பேரிடம் பிரமாண பத்திரத்தை பெறும் பணி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

PREV
14

பாமகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவர் ராமதாஸ் அய்யா பாமக என்ற புதுக் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்களை நடத்தி தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு இரு அணிகளும் தீவிரம் காட்டி வருன்றனர். இந்நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டத்தை நடத்தினர்.

24

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் தனியார் மகாலில் கடந்த 18-ம் தேதி பாமக வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர் கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.

2026 சட்ட மன்ற தேர்தல் பணிகளை கவனிக்க மூத்த தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்து இருந்ததார். ஆனால், கனமழையால் திண்டிவனத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் தற்போது மவுனம் காத்து வருகிறார். வழக்கமாக டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை தோறும் நிருபர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரமும், நேற்றும் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை.

34

இந்நிலையில் ராமதாஸை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகிறது. சில கட்சிகள் இருவரையும் சமாதானப்படுத்தவும் முயன்று வருகிறனர். ஆனாலும் ராமதாஸ் எந்த கட்சிகளுக்கும் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். கூட்டணி தொடர்பாக டிசம்பர் மாதம் 30-ம் தேதி சேலம் மாவட்டம், தலைவாசலில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

இந்த கூட்டத்திற்கு முன் தேர்தல் ஆணையத்தின் பதில் கிடைத்து விடும் எனவும் அவர் நம்பிக்கையாக இருக்கிறார். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின்னரே அவர் கூட்டணி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூற்றப்படுகிறது. பாமகவை கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக ராமதாஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

44

இந்தக் கட்சி 'அய்யா பா.ம.க.' என்ற பெயரில் பதிவு செய்ய உள்ளதாகவும், ராமதாஸ் ஒரு கட்சியின் நிறுவனராக இருப்பதால் அவர் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய முடியாது என்பதால் ஆதரவாளர் பெயரில் தொடங்க திட்டம் எனவும் கூறப்படுகிறது. சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் பெயரில் இந்த புதுக் கட்சி தொடங்கப்படுகிறது. புதிய கட்சியை தொடங்க 100 பேரிடம் பிரமாண பத்திரத்தை பெறும் பணி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories