அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!

Published : Jan 12, 2026, 05:54 PM ISTUpdated : Jan 12, 2026, 06:02 PM IST

திமுகவின் வழக்கப்படி, ஆட்சியின் கடைசி நேரத்தில், தேர்தல் நெருங்கி வருவதை சாக்காக வைத்து எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும், பொதுமக்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை தனித்தினியாக வாரி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.

PREV
15
தனித் தனியாக பொங்கல் கிஃப்டு

திமுகவின் வழக்கப்படி, ஆட்சியின் கடைசி நேரத்தில், தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் தொகுதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பெண்களுக்கு தனித் தனியாக பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளை திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.

25
சமையல் குக்கர்- பொங்கல் தொகுப்பு

கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட போதும் ‘ரொக்கப் பணம்’ கொடுக்கவில்லை. ஆனால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கல் சார்பில் தங்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வழங்கி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு விலையுர்ந்த சமையல் குக்கர், சர்க்கரை, நெய், கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பை கூப்பன்களை கொடுத்து வாரி வழங்கி கொடை வள்ளல் தனத்தை காட்டி வருகிறார்.

35
கோலப்போட்டிக்கு ஃப்ரிட்ஜ் -வாஷிங் மெஷின்

விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜா சார்பில் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் கிஃப்டாக சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் கிஃப்டை வழங்கி வருவதோடு, கோலப்போட்டி வைத்து, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என வழங்கி நாள்தோறும் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இதற்காக விருகம்பாக்கம் பகுதிகளில் ஏரியாவாரியாக மேடைகள் அமைத்தும், சமுதாய நலக்கூடங்களிலும் விழாக்களை ஏற்பாடு செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொகுதி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோரை அழைத்து பரிசுகளை வழங்கி வருகிறார்.

45
ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி'

அதேபோல, திமுகவின் சீனியர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கலுக்கான கிஃப்ட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கொடுத்து வருகிறது. அதை வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு அக்கடையின் அருகிலேயே ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’ கொடுக்கப்படுகிறது. அந்த பெட்டியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும், தட்டு, குக்கர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறது.

55
புலம்பும் எதிர்கட்சி நிர்வாகிகள்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ-க்கள் தரப்பால் கொடுக்கப்படும் ‘எலெக்சன் கிஃப்ட்’ என்ற குதூகலத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் பொது மக்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னும் நிறைய கிஃப்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கிஃப்டை கொடுத்து அவரவர் தொகுதி மக்களை இழுக்க ஆரம்பித்துள்ளனர். மறுபுறம் எதிர்கட்சியை சேர்ந்த, சீட்டு கேட்டு எதிர்பார்ப்பில் காத்திருக்கும் வருங்கால வேட்பாளர்கள், சீட்டையும் உறுதி செய்ய முடியாமல், துணிந்து செலவழிக்கவும் முடியாமல் வயிற்றெரிச்சலில் ஈரத்துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு புலம்பித் தவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories