அண்ணாமலையில் நிலை என்ன? அவர் நம்மை மிரட்டுகிறார். அவரது சொந்த மாநிலத்தில் யாரும் அவரிடம் கேட்பதில்லை. இவை பாஜகவால் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பூச்சிகள்" என்று உஷ்ணத்தை கிளப்பியுள்ளார்.
அண்ணாமலையின் மும்பை குறித்த பேச்சு சிவசேனா கட்சியினரையும், ராஜ் தாக்கரே சகோதரர்களையும் கோபப்படுத்தியுள்ளது. அண்ணாமலையை ராஜ் தாக்கரே ‘பூச்சி’ என்று கூறுகிறார். சஞ்சய் ராவத் அவரை ‘புழு’ என்று அழைத்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மும்பை குறித்து பேசிய விவகாரம் பிரளயமாய் வெடித்து வருகிறது. சிவசேனா யுபிடி தலைவர் சஞ்சய் ராவத் , ‘‘ சிவசேனா தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஃபட்னாவிஸும், இரண்டு துணை முதல்வர்களும் மராத்தி மக்களின் உப்பைத் தின்று வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை போன்றவர்களை மும்பைக்கு அழைப்பதன் மூலம் சூழலைக் கெடுக்கிறார்கள். அண்ணாமலையில் நிலை என்ன? அவர் நம்மை மிரட்டுகிறார். அவரது சொந்த மாநிலத்தில் யாரும் அவரிடம் கேட்பதில்லை. இவை பாஜகவால் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பூச்சிகள்" என்று உஷ்ணத்தை கிளப்பியுள்ளார்.
24
அண்ணாமலையுடன் சிவசேனா மோதல்
முன்னதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அண்ணாமலையை பூச்சி என்று கூறினார். மகாராஷ்டிரா தொடர்பான விஷயங்களில் பேசும் அவரது உரிமையை ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பினார். அண்ணாமலையை கேலி செய்த தாக்கரே, சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிலிருந்து ஒரு புழு மும்பைக்கு வந்ததாகக் கூறினார்.
34
அண்ணாமலை சவால்
சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, "என்னை மிரட்டுவதற்கு ராஜ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, உத்தவ் தாக்கரே, யார்? நான் ஒரு விவசாயியின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் என்னை திட்டுவதற்காக கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். நான் மும்பை வந்தால் காலை வெட்டுவேன் என்கிறார்கள். நான் மும்பை வருகிறேன். என் காலை வெட்டிப் பாருங்கள். இந்த உருட்டல், மிரட்டுலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
பம்பாய் மகாராஷ்டிராவின் நகரம் அல்ல என்றும் மும்பைக்கும் மகாராஷ்டிராவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். அவர் யார்? மும்பைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? அதனால்தான் பாலாசாகேப், 'லுங்கியை கழற்றுங்கள், புங்கி வாசிக்கவும்' என்றார்.
முன்னாள் தமிழக பாஜக தலைவர், ‘‘மும்பை மகாராஷ்டிராவின் நகரம் அல்ல. அது ஒரு சர்வதேச நகரம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.