அமலாக்கத்துறையை வைத்து சர்வே செய்கிறீர்கள், சோதனை செய்கிறீர்கள், நீதிமன்றத்திற்கு இழுக்கிறீர்கள் என்கிறார்கள். அதையும் உச்ச நீதிமன்றம் மூலம் திருப்பி திருப்பி இல்லை வழக்கு வந்திருக்கிறது சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் பணம் வசூலிப்பதற்கு எதிரான அமைப்பது சொல்கிறது அமலாக்கத்துறை கையில் எடுக்கும் வழக்குகளால் தான் நிறைய மோசடி செய்தவர்களின் சொத்துக்களை அபகரித்து எடுத்துக் கொண்டு அதை ஏலத்தில் விட்டு அதிலிருந்து வரக்கூடிய பணத்தை எங்கே கடன் வாங்கி ஏமாற்றினார்களோ அந்த வங்கிகளுக்கு திரும்பி போய் சேர்க்கப்பட்டது என்கிறது. அது உலக அளவில் பாராட்டப்படுகிறது. தாங்கள் செய்த குற்றங்களை மறைப்பதற்காக அமலாக்கத்துறை சோதனை, சிபிஐ சோதனை, வருமானவரித்துறை எங்கள் மீது வருகிறது என்றெல்லாம் கதை சுற்றுகிறார்கள்.
ஒரு இடத்தில் கூட வருமானவரித்துறை சோதனை தப்பாகவில்லை. கோடியாக கோடி கோடியாக வைத்திருந்த பணமும், தங்கமும், இல்லாத சொத்துக்களும் வெளியில் வருகிறது. ஆகையால் அதைக் கண்டால் இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் இப்போது அவர்களது அடுத்த குறி எஸ்ஐஆர். தவறு இங்கே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 13 முறை எஸ்ஐஆர் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் எதுவும் சொல்லவில்லை. இப்போது திடீரென வருகிறார்கள். வரப்போகிற தேர்தலில் தோல்வி நிச்சயம். ஆகையால் இப்போதே ராகுல் காந்தி ஹரியானாவில் பொய் சொல்கிறார்.