ஆதவ் அர்ஜூனாவை விஜய் கட்சிக்கு அனுப்பியதே திமுகதான்..! பகீர் கிளப்பும் மைத்துனர் சார்லஸ் மார்ட்டின்..!

Published : Nov 11, 2025, 02:37 PM IST

அவர்தான் மட்டும் தான் இருக்க வேண்டும், அவர்தான் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார். வீட்டில் தொடங்கி, திமுகவில் ஆரம்பித்து, விடுதலை சிறுத்தைகளில் வில்லங்கம் செய்து, தவெகவிற்குள் வந்துள்ளார்.

PREV
14

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவரது சகோதரி டெய்சி மார்ட்டினை காதல் திருமணம் செய்து கொண்டவர் தான் தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. லாட்டரி அதிபர் மார்ட்டினின் பல லட்சம் சொத்துக்களுக்கு வாரிசுள் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும், மகள் டெய்சியும் மட்டுமே.

கோவையைச் சார்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரரும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் மற்றும் தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை திருமணம் செய்து கொண்டதால் சொத்து தொடர்பாக மார்ட்டின் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வாய்ஸ் ஆப் காமென்ஸ் நிறுவனத்துக்காக மார்ட்டினின் நிறுவனத்திலிருந்து ஆதவ் அர்ஜூன் ₹82.5 கோடி கடன் பெற்று இருந்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது.

24

இந்நிலையில், புதுச்சேரியில் தனியாக கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகும் திட்டத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது மைத்துனர் ஆதவ் அர்ஜூனா பற்றி கூறியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ‘‘ ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனாவை தவெகவிற்கு அனுப்பிவிட்டதே திமுகதான். தவெக எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்க வைக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்வதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தவெகவை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். விஜய் வேறு எந்த கூட்டணிக்கும் செல்லாமல் இருந்தாலே நாம் ஜெயித்து விடலாம் என்பது திமுகவின் கணக்கு.

கூடவே இருந்து விஜயை அதிகமாக புகழ்ந்து அவரை வீழ்த்துவதற்காகவே திமுகவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா. காரணம் தவெகவிற்குள் நாலைந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே அவர்களை நாம் கவனித்து விட முடியும். 2016-ல் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என்கிற மக்கள் நல கூட்டணி உருவானது. அது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வர மிகவும் உதவியது. அதேபோல திமுக ஜெயலலிதாவின் முயற்சியை இப்போது எடுத்துள்ளது.

34

விஜய்யை மூன்றாவது அணியாக இறக்கி, எதிர்ப்பு ஓட்டை மீண்டும் மடைமாற்றி ஆட்சியை அமைக்க பார்க்கிறது திமுக. அதற்காக சில காய்களை திமுக நகர்த்தி வருகிறது. தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடக் கூடாது என்பதை ஆதவ் அர்ஜூனா உடனிருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகிறார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா செல்லும் இடங்களிலும் பிரச்சினைகளும், குழப்பங்களும் தொடர்ச்சியாக ஏற்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா எங்கள் தங்கை மூலம் தான் எங்கள் குடும்பத்திற்கு உள்ளே வந்தார். மருமகனாக வீட்டிற்கு வந்தவர், எங்கள் தொழிலை எடுத்துக் கொள்ள நினைத்தார். எங்கள் நிறுவனங்களை அபகரிக்க முயன்றார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குடும்பத்தில் சண்டை உருவாகி எனக்கும், அப்பாவுக்கும் பாகுபாடு ஏற்பட்டது. என்னை இரண்டு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினார் ஆதவ். அதன் பிறகு திமுகவுக்கு சென்றார். அங்கே மாப்பிள்ளை சபரிசனுக்கும், மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தினார். அங்கே கட்சியை கைப்பற்ற சபரீசனுக்கு எனக்கு சில ஐடியாக்களை கொடுத்து குடும்பத்தை பிரித்ததால் அங்கிருந்து துரத்தப்படுகிறார் ஆதவ். அங்கே அடித்து விரட்டப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்க்கப்படுகிறார். அங்கேயும் தலைமையை மீறி இவராக செயல்பட்டு தலைவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து துரத்தப்படுகிறார்.

44

அடுத்தது தவெக கட்சிக்குள் வந்திருக்கிறார். அங்கேயும் அவர்தான் மட்டும் தான் இருக்க வேண்டும், அவர்தான் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார். வீட்டில் தொடங்கி, திமுகவில் ஆரம்பித்து, விடுதலை சிறுத்தைகளில் வில்லங்கம் செய்து, தவெகவிற்குள் வந்துள்ளார். அவர் கடைசியில் தவெக பொதுக்குழுவில் பேசிய பேச்சை கூர்ந்து கவனித்தால் அது திமுக தாக்கப்பட்டதைவிட, தவெகவை டேமேஜ் செய்யும் வகையில் பேசியதுதான் அதிகமாக இருக்கும். அது மற்றவர்களுக்கு நன்றாகப்புரியும்’’ என குற்றம்சாட்டியுள்ளார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

குடும்பச் சண்டை அரசியல் வழியாக வந்து சந்தி சிரிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories