நாமக்கல், குமாரபாளையத்தில் அதிமுகவின் பரப்பரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துகொண்டு இருந்தபோது திடீரென்று தவெக கொடிகள் பறந்ததால் உற்சாகமான அவர் பார்த்தீங்களா? கொடி பறக்குதா? பிள்ளையார் சுழி போட்டாச்சு என உற்சாகமாகப்பேசினார். அதன்பிறகு தவெக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது என்கிற ரீதியில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களும் உற்சாகமாகி விட்டனர்.
இவை எல்லாவற்றுக்கும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஜய். அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விஜய் தலைமையில் கூட்டணி, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரி, விஜய் தரப்பு ஏன் இந்த முடிவுக்கு வந்தது? ‘‘நாம் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கி இருக்கிறோம். நமக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கவா நாம் தவெகவை தொடங்கினோம்?