முதலாவதாக அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தேர்தலுக்கு நல்லது தான், மறுப்பதற்கு இல்ல. அதேவளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விட்டுவிட விரும்பவில்லை. இருக்குற பிளேயர்ஸ்லேயே பெட்டர் பிளேயர் எடப்பாடி தான். அவரை வைத்து தான் பாஜகவும் நான்கு எம்எல்ஏக்களை பெற்றது. அதிகமுகவுக்கு அதிக எம்எல்ஏக்களை வெற்றிகரமாக கொண்டு வந்தது எடப்பாடி மட்டும்தான். அதனால அந்த படகில் ஏறி சவாரி செய்துதான் டார்கெட்டை இப்போதைக்கு அடைய முடியும். அவருடைய நகர்வுக்கு எதிராக எதையும் பாஜக செய்ய விரும்பவில்லை.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடி இங்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமியை மட்டும்தான் சந்தித்தார். கூட்டணிக்கு வந்த பிறகு வேறு யாரையும் அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதே போல அமித் ஷா வந்தபோதும் யாருக்கும் நேரம் ஒதுக்கவில்லை. செங்கோட்டையன் விவகாரத்திலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் அமித் ஷா. எந்தவிதமான பாசிட்டிவான சிக்னலை அமித் ஷா கொடுக்கவில்லை. அனுசரித்து, இணைந்து பயணியுங்கள். முதலில் உங்களுடைய கட்சிக்குள் பொது செயலாளரோடு இணைந்து பயணியுங்கள் என்கிற ரீதியில் தான் அட்வைஸ் கொடுக்கப்பட்டது .