விஜயின் தாராள மனசு..! நொறுங்கிய இன்னோவாவுக்கு மாற்று... தவெக கொடுக்கும் காயிலான் கடை கார்..?

Published : Sep 12, 2025, 08:11 PM IST

இது விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் சங்கடத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இருந்ததால், கட்சியின் பிம்பத்தை பாதித்தது. நொறுங்கிய காரின் உரிமையாளரான உசிலம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

PREV
14

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு 2025 ஆகஸ்ட் 18 ம் தேதி மதுரை விமான நிலையம் அருகில் உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, 100 அடி உயரமுள்ள, சுமார் 1000 கிலோ எடை கொண்ட கொடி கம்பம் திடீரென சாய்ந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு டொயோட்டா இன்னோவா கார் அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக, அப்போது அந்தக் காருக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. காரின் உரிமையாளர் தினேஷ் குமார் தீவிர விஜய் ரசிகர். அவர் மாநாட்டில் பங்கேற்க காரை அங்கு நிறுத்தியிருந்தார்.

24

கொடி கம்பம் காரின் டோர் மற்றும் பாடி பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இன்னோவா காரின் வலுவான ஹை-ஸ்ட்ரெங்த் ஸ்டீல்லால் முழுமையாக சேதாரம் ஏற்படவில்லை என்றாலும் அதனை சரிசெய்ய ஏழு லட்சங்கள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டது. விபத்தில் சிக்கிய TN 64 D 0005 என்கிற பதிவு எண் கொண்ட அந்த காரின் இன்சூரன்ஸ் 2026 வரை இருந்தாலும் 15 வருடம் 4 மாதங்களான பழைய கார் அது. 15 ஆண்டுகளுக்கு மேல் சென்றால் வண்டியை புதுப்பித்து ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று எஃப்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்ஷுரன்ஸே இருந்தாலும் எந்த கிளைம் செய்ய முடியாது. காயலான் கடையில் எடைக்கு மட்டுமே போடப்படும் நிலையில்தான் இருந்தது.

ஆனாலும் மாநாட்டின் போது விஜய் இதை அறிந்து, காரின் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு புத்தம் புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக தரப்பில் கூறப்பட்டது. பழைய காருக்கு பதில் புதிய காரா? என பலர் விஜயை பாராட்டினர். ஆனால் மாநாடு நடந்து ஒரு மாதம் ஆன பிறகும் இன்னும் உதவி செய்யவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

34

இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் முன்வந்து, காரை இலவசமாக சரிசெய்ய உதவுவதாக அறிவித்தார். அவர் சிறு வயதிலிருந்தே விஜய் ரசிகராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இது விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் சங்கடத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இருந்ததால், கட்சியின் பிம்பத்தை பாதித்தது. நொறுங்கிய காரின் உரிமையாளரான உசிலம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

44

இந்நிலையில் மாற்று கார் குறித்து பேசிய அவர், ‘‘ இதுவரை எனக்கு வேறு கார் வாங்கித் தரவில்லை. புதிய காரை வாங்கித் தருவதாகக் கூறினார்கள். ஆனால் பழைய காரையே வாங்கித் தருவாக சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு அல்லது நாளைக்கு வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு வண்டி போச்சு. அதுக்குப்பதிலாக கார் வந்தால் போதும். பழையதா இருந்தால் என்ன? புதியதாக இருந்தால் என்ன? எனக்கு கார் வந்தால் போதும்’’ என்கிறார் தினேஷ். புதிய கார் வாங்கித் தருவதாக சொன்ன தவெக இப்போது பழைய காரையே வாங்கித் தருவதாக கூறியிருப்பது தவெக மீது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. கயிலான் கடை காரைத்தான் வாங்கித் தருவார்களோ..?

Read more Photos on
click me!

Recommended Stories