4 மணிக்கே நிலைமை மோசம்..! புஸ்ஸிக்கு எச்சரிக்கை செய்த கரூர் SP..! தட்டி கழித்த ஜான் ஆரோக்கியம், ஆதவ்..!

Published : Sep 28, 2025, 10:14 AM IST

விஜய்யும் கிட்டத்தட்ட கரூர் கூட்டத்தை ரத்து செய்யும் திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுவும் அவரது வருகையின் தாமதத்துக்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ‘‘பெரம்பலூர் போன்று நம்மால் திருப்பி செல்ல முடியாது'' என வாதம் செய்துள்ளனர் 

PREV
14

விஜய் தலைமையிலான தவெக நேற்று கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டது. இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் துயர சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பிரச்சாரத்துக்கு சுமார் 10,000 பேர் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 27,000-க்கும் மேற்பட்டோர் கூடினர். விஜயின் ரசிகர்கள், கட்சி ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால் கட்டுப்பாடு இல்லாமல் நெரிசல் ஏற்பட்டது.

500 போலீஸார் மட்டுமே இருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு இல்லை. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி தாமதமானது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவு பாதுகாவலர்களோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லை.

கரூர்-ஈரோடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள சிறிய இடமான வேலுச்சாமிபுரம் நடத்தப்பட்டது. பெரிய மைதானத்தில் அனுமதி கேட்டும் சிறிய இடமே ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

24

சில தகவல்களின்படி, மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், அதனால், விஜய் பேச்சின்போது கூட்ட நெரிசல் அதிகரித்து, சிலர் மயங்கி விழுந்ததால் நிலைமை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது விஜய் தண்ணீர் பாட்டில்களை பரிமாற்றி உதவ முயன்றும்,கூட்டம் கட்டுக்குள் இல்லை.

விஜய் மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு 7 மணி நேரம் கழித்தே கரூருக்கு வந்தார். அத்தனை மணி நேரமும் மக்கள் கூட்ட நெரிசலில் தத்தளித்தது முக்கிய குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது. அவர் வந்த பிறகு மாலை 6:30 மணிக்கு தொடங்கி, 7:45 மணியளவில் நெரிசல் தீவிரமடைந்தது.

34

காவல்துறை அளித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களான நெரிசலை கட்டுப்படுத்தல், அனுமதி இடங்களை தவெகவினர் மீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதாக காவல் துறையினர் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும், அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.

44

விஜய்யும் கிட்டத்தட்ட கரூர் கூட்டத்தை ரத்து செய்யும் திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுவும் அவரது வருகையின் தாமதத்துக்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ‘‘பெரம்பலூர் போன்று நம்மால் திருப்பி செல்ல முடியாது. பரப்புரையை நடத்தியாக வேண்டும் என புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி இருவரும் வாதம் செய்ததாக சொல்கிறார்கள் கரூர் எஸ்பி அலுவலகத்தில் இருக்கும் காவல்துறையினர்.

Read more Photos on
click me!

Recommended Stories