நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும் காரணங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பதவி நீக்கம் போன்ற ஒரு அரிய, விதிவிலக்கான, தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த அவை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் அவசரகால காலத்தையும் மேற்கோள் காட்டி, "பதவி நீக்கத்தின் உண்மையான நோக்கம் நீதித்துறையின் நேர்மையைப் பேணுவதே தவிர, அதை அழுத்தம், சமிக்ஞை மற்றும் பழிவாங்கலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதில்லை" என்றும் கூறினர். அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நீதிபதிகளை கட்டாயப்படுத்த நீதிபதிகளை நீக்குவதாக அச்சுறுத்துவது அரசியலமைப்பு பாதுகாப்பை மிரட்டல் கருவியாக மாற்றுவதாகும். இத்தகைய அணுகுமுறை ஜனநாயக விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது’’ எனத் தெரிவித்துள்ளனர்.