‘‘அந்த அம்மா இல்லாத நேரத்திலேயே 65 இடங்களில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள். திமுக Vs அதிமுக என்று இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘அந்த தனியார் தொலைக்காட்சியில் காட்டிய வீடியோவுக்கு அடுத்து 35 வது நிமிடத்தில் அண்ணாமலை டிவிட் செய்கிறார். ஹெச்.ராஜா, அப்புறம் நைனார் நாகேந்திரன், அடுத்து கஸ்தூரி, வானதி சீனிவாசன். இவர்களெல்லாம் யார்? அவ்வளவு பேரும் சங்கிகள். அப்படியானால் திருமாவளவனை எதிர்க்கக் கூடிய அத்தனை பேரும் ஒரே கான்செப்டில் இருப்பவர்கள். நீதிபதி சொன்னார், ‘‘என்றைக்கு மனுஷ்மிருதி பற்றி பேச தொடங்கினாயோ அன்றைக்கே இதெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் இந்த தாக்குதல் நடக்கத்தானே செய்யும்’’ நாம் இதை எதிர்பார்க்கிறோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.