இந்நிலையில், விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு, அதிமுக எதிர்ப்பு போன்ற காரணங்களால் தேமுதிக அந்தத் தொகுதியில் பின்னடைவை சந்தித்தது. அதற்கடுத்து அவரது மரணம், நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவியது என தேமுதிக செல்வாக்கை மீண்டும் அங்கு பெற முடியவில்லை.
இதனையடுத்து தவெகவை துவங்கிய விஜய், இரண்டாவது மாநில மாநாட்டில் 'கேப்டன் விஜயகாந்த்' எனது அண்ணன் என குறிப்பிட்டு பேசினார். இதனை, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விமர்சனம் செய்தார். இந்நிலையில், விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த விருத்தாசலம் தொகுதி விஜய்க்கும் வெற்றி வாய்ப்பை தரும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.