ஏழை, இளைஞர், பெண்கள், விவசாயிகள், உழைப்பாளர்களை மையகாகக் கொண்டு வாக்குறுதிகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏழ்மையை ஒழிக்க வேண்டும், ஊழலைத் தடுக்க வேண்டும் என சமூக நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள், முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, சட்டம்-ஒழுங்கை கடுமையாக்குவது.
இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஏழைகள் முதியோர் நலன். திருநங்கைகளுக்கு சிறப்பு உதவிகள். வீடு, இரு சக்கர வாகனம், அடிப்படைத் தேவைகள் போன்றவற்றை உறுதி செய்வது. ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, குடிநீர், மின்சாரம், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை அனைவருக்கும் உருவாக்குவது.