உதயநிதியை இன்னுமா விட்டு வைச்சிருக்கீங்க..? அமித் ஷாவிடம் அணத்திய இபிஎஸ்..! லீக்கான பகீர் தகவல்..!

Published : Sep 17, 2025, 04:26 PM IST

பொன்முடி, கே.என்,நேரு, எம்.ஆர். பன்னீர்செல்வம், துரைமுருகன், உதயநிதி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை விறு விறுப்படையாததற்கு காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? இந்த வழக்குகளை அமலாக்கத்துறை துரிதப்படுத்த வேண்டும்.

PREV
13

நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அமித் ஷாவிடம், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் மீது உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீதான கார் வழக்கு, டாஸ்மாக் வழக்கு மணல் கொள்ளை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

23

அதில் மிக முக்கியமாக திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் தேக்க நிலையில் இருக்கிறது. இந்த வழக்குகள் ஏன் தேக்க நிலையில் இருக்கின்றன? ஏன் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? அமைச்சர்கள் பொன்முடி, கே.என்,நேரு, எம்.ஆர். பன்னீர்செல்வம், துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை விறு விறுப்படையாததற்கு காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? இந்த வழக்குகளை அமலாக்கத்துறை துரிதப்படுத்த வேண்டும். உதயநிதி சொகுசுக்கார் இறக்குமதி செய்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது நீதிமன்ற தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை

33

தமிழக அமைச்சர்களின் அழுத்தத்தின் காரணமாக தேக்க நிலை உள்ளதா? அவர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு கை கொடுக்கும்’’ என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக டெல்லி சோர்ஸ்கள் கூறுக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories