மேலும் அந்த பதாகையில் ஒருபுறம் அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் நடுவில் கைகுலுக்கியபடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது போல படம் வைக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது படங்களும் இடம்பெற்றுள்ளது. அந்த பதாகையில் தமிழகத்தை காப்போம்! கழகத்தை ஒன்றிணைப்போம்! பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே ஒன்று சேருங்கள்! 2026 ல் வென்றிடுவோம்.. எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.