‘‘வழி தெரியாமல் தவித்த எனக்கு வழிகாட்டினார் விஜய்... ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான்’’ என மேடையில் கண் கலங்கினார் செங்கோட்டையன்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் பேசிய அவர், ‘‘வழிதெரியாமல் தவித்த போது எனக்கு வழிகாட்டினார். (கண்ணீர் கலங்குகிறது. நா தழுதழுக்க..) நான் இன்றைக்குச் சொல்கிறேன்.என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான். தட்டுங்கள் திறக்கப்படும். சொல்லுங்கள் கேட்கப்படும் என ஏசுபிரான் சொன்னார்.இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்வதாகச் சொன்னார்கள்.