புதிய கல்விக் கொள்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மொழிகளில் பாடத்தை தருகிறோம் என கூறுகிறார்கள். அதை வரவேற்கிறோம். ஆனால், அதற்குரிய வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும் இந்திக்கு ஆட்சி மொழி கொடுத்து ஒரு தகுதியை வழங்கி உள்ளது போல் தமிழ் போன்ற தகுதி உள்ள மத்த மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுத்தால் தான் தங்களது தாய் மொழியில் படிக்க முன் வருவார்கள். வட இந்தியாவில் அதிக அளவில் ஆங்கிலம் படிக்கிறார்கள் அவர்களுக்கு இந்தி என்பது சாதாரண விஷயம் அதேசமயம் இங்கு ஆங்கிலம் படிக்க வேண்டாம் என கூறுகிறார்கள். அதற்கு முதலில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் இதை விடுத்து காலணி ஆதிக்கம் கலாச்சாரம் மாறுபாடு என பேசுவது ஒரு நாடகமாக கருதுகிறேன். 2014 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆகவே கூட்டணியில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று இல்லை.