ஆகையால் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறட்டும் என விட்டுக் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் உள்ளன. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்து, அதிமுக பலமாகி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அதனை தவிர்க்கவே பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், சசிகலா, வைத்திலிங்கம், செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் போன்றவர்களை எல்லாம் எடப்பாடி பழனி சாமி சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்.
இவர்களை இணைத்துக் கொண்டால் அதிமுக வலிமையாகி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அதை தவிர்த்து விட்டார். அதற்கேற்றாற்போல இவர்களும் திமுக, தவெக போன்ற மாற்றுக் கட்சிகளில் இணைந்து விட்டனர். கூட்டணிக்குள் பிற கட்சிகளை கொண்டுவர அந்த கட்சிகளுக்கு கொடுக்க டெல்லி பாஜக எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.2000 கோடி கொடுத்துள்ளது. அதனை செலவிடாமல் அப்படியே பதுக்கிக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அவர் முதலமைச்சராக இருந்த கடைசி காலகட்டத்தில் பல தொழில் அதிபர்கள், நிறுவனங்களிடம் இருந்து சில சலுகைகளை செய்து தருவதாக ரூ.5000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை பெற்றுள்ளார். தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அதை சலுகையாகவோ, பணமாகவோ கேட்பார்கள் என்பதும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக விரும்பாததற்கு ஒரு முக்கிய காரணம்.