முன்னாள் அமைச்சர் பொன்முடியையும், வெள்ளக்கோயில் சாமிநாதனையும் துணைப் பொதுச் செயலாளராக அறிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியாகாமல் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரில் வெளியானது. இப்போதுள்ள பொதுச் செயலாளர் துரைமுருகன் விலகலுக்குப் பிறகு வன்னியரான ஜெகத்ரட்சகனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்போது திமுகவில் ஏழு பேர் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள். இனி 9 பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.