தம்பி உதயநிதி..! மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்..! அதிர்ந்த அரங்கம்..!

Published : Nov 08, 2025, 03:52 PM IST

சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல் திராவிடக் கழக இதழ்களை ஒரு திமுககாரர் வசிக்க, அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலகத்தவர்களை தெரிந்து கொண்டார்கள். இப்படி நாம் பெற்ற வெற்றி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை’’ என தெரிவித்தார்.

PREV
13

திமுக இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.கஸ்டாலின், பேசும்போது, மகன் உயதயநிதியை போற்றிப் புகழ்ந்தார்.

ஸ்டாலின் பேசுகையில், ‘‘உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் விரும்பிய அறிவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள இளைஞரணி செயலாளர், கொள்கை இளவல் தம்பி உதயநிதி அவர்களையும், அவருக்கு துணை இருக்க கூடிய இளைஞரணி அன்பர்களையும் பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். கடந்த ஒரு மாத காலமாக இந்த அறிவு திருவிழாவுக்கான பணிகளை தம்பி உதயநிதி ஸ்டாலின் மும்பரமாக ஈடுபட்டு அந்த பணிகளில் அவர் எந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முழுமையாக செயல்பட்டு செயல்படுத்தி வருகிறார் என்பதை முரசொலி செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.

23

நானும் அப்படி என்னதான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள் என்று பார்ப்போம் என காத்துக் கொண்டிருந்தேன். நான் இடையில் எதுவுமே கேட்கவில்லை. இந்த அறிவுத் திருவிழாவை பார்த்த பிறகு சொல்கிறேன். என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதை விட, நல்லா கவனியுங்கள். வீண் போகவில்லை என்று சொல்வதை விட நான் நினைத்ததை விட சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இன்னும் சொல்கிறேன் தம்பி உதயநிதியின் கொள்கை பிடிப்பு மிக்க செயல்பாடுகளை பார்க்கிறபோது அய்யன் வள்ளுவர் சொன்னார் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை இன்னோற்றான் கொள். இன்னும் அந்த குரளுக்கு ஏற்ப தம்பி உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். ஏன்? இது என் அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவு திருவிழாவை நீங்கள் இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆண்டு தோறும் நடத்திட வேண்டும். நிச்சயம் இளைஞர் அணி இதை சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967 முதல் மாநில கட்சியாக ஆட்சியைப் பிடித்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று வேட்பாளரை காட்டாமல் நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் கடைகோடி தொண்டர்களில் இருந்து தலைவர்கள் வரை சுற்றிச்சூழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள்.

33

எத்தனை பத்திரிகைகள்? எத்தனை புத்தகங்கள்? எத்தனை பொதுக் கூட்டங்கள்? எத்தனை கொள்கை வகுப்புகள்? நாணயங்கள், திரைப்படங்கள், போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள்? எத்தனை தண்டனைகள்? எத்தனை துரோகங்கள்? திமுக உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. சமூகத்தில் சரி பாதி மக்கள் கல்வி அறிவு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் முடி திருத்தும் நிலையங்களில்கூட மக்களின் கல்வியை சிந்தனைப்படுத்தும் நிலையங்களாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல் திராவிடக் கழக இதழ்களை ஒரு திமுககாரர் வசிக்க, அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலகத்தவர்களை தெரிந்து கொண்டார்கள். இப்படி நாம் பெற்ற வெற்றி என்பது யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை’’ என தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories