மறைமலை நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பரும் உயிரிழந்தனர். புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப்பின் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.