வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!

Published : Dec 08, 2025, 04:48 PM IST

தமிழகத்தில் இண்டியா கூட்டணில் இருக்கும் திமுக தலைமையிலான தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்டும், அதிக சீட்டுகள் கேட்டும் இல்லையெனில் தவெக கூட்டணிக்கு செல்வதாகவும் பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.

PREV
14

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வரும் நிலையில் ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் கருத்து கூட்டணிக்குள் மேலும் பிளவை ஏற்படுத்துவதை உறுதி செய்திருக்கிறது. உமரின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்துள்ள நிலையில் இண்டியா கூட்டணி வெகு விரைவில் சுக்குநூறாக உடையலாம் என அரசியல் நோக்கங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதையாகத்தான் இந்தியா கூட்டணியும் தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து கொண்டே வருகிறது. கட்டெறும்பு கூட சற்று சுறுசுறுப்பாகத் தான் ஓடும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ கும்பகர்ணன் தூக்கத்தை விடுவதாக தெரியாததால் உடனிருக்கும் கட்சிகளே ஒவ்வொன்றாக கழன்று கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு வாங்கிய மரண அடியிலிருந்து மீள முடியாமல் சொல்லொனா துயரத்தில் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த எனர்ஜி ட்ரிங்க்ஸ் தான் இந்தியா கூட்டணி.

24

தோல்வியிலிருந்து இனி மீளவே முடியாது என்று நினைத்த காங்கிரஸின் கரம் பற்றி, கட்டமைத்து கட்சிக்கு புத்துயிர் அளித்ததே மாநில கட்சிகள் தான். அப்படிப்பட்ட மாநில கட்சிகளுக்காகவாவது ஓடோடி உழைக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, வழக்கம் போல் மந்தத்தில் மல்லாந்து படுத்து கொண்டிருப்பது உடனிருக்கும் கட்சிகளை உசுப்பேற்றி இருக்கிறது. மக்களவை தேர்தலுக்கே இப்படி என்றால், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் சொல்லவா வேண்டும்? மாநில கட்சிகள் மாங்கு மாங்கென என உழைத்தால், காங்கிரஸ் கட்சியோ கோஷ்டி அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்பதே எழுதப்படாத விதி.

காங்கிரஸ் தலைமையின் தொடர் தோல்விகளால் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயிருக்கும் கூட்டணி கட்சிகள், பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னராக முற்றிலுமாக கூட்டணியில் இருந்து கழற்றி விட காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறது. காங்கிரசை விட்டால் பாஜக தான் சாய்ஸ் எனும்போது அங்கே செல்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் சில கட்சிகள், பல்லைக் கடித்துக்கொண்டு சம்பிரதாயத்திற்கு மட்டுமே இண்டியா கூட்டணியில் நீடிக்கிறது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அதீத நம்பிக்கையில் வழக்கம் போல் ராகுலை தவிர அந்த கட்சியினர் மிதப்பில் சுற்றிக்கொண்டிருந்து நிலையில் உடன் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டுமே மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருந்தது.

34

இதையெல்லாம் கண்டு கடுப்பாக இருக்கும் கூட்டணி கட்சிகள் தற்போது காங்கிரசுக்கு எதிராக வன்மத்தை கக்க தொடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சரும், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா இந்தியா கூட்டணி வெண்டிலேட்டரில் இருப்பதாகவும், காங்கிரஸ் கூறும் வாக்குத்திருட்டு, இவிஎம் முறைகேடு போன்றவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை என்று தடாலடியாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் உழைப்பதில்லை என்றும் அவர் கடுமையாக சாடி உள்ளார். உமரின் இந்த கருத்தை அப்படியே வழி மொழிந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி எந்த ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் கோஷ்டியை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.

தொகுதி பங்கீடு பிரச்சாரம் போன்றவற்றில் குறைபாடு இருப்பதாகவும், தேர்தல் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை என்றும் சாடும் டி.ராஜா இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டதன் நோக்கத்தின் அடிப்படையில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மமதா பானர்ஜி போன்றவர்கள் இந்தியா கூட்டணியை விட்டு விலகி இருக்கும் நிலையில், ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த ஹேமந்த் ஷோரனும் இன்றோ, நாளையோ என்ற நிலையில்தான் உள்ளார். போதாக்குறைக்கு ஆள்வதே மூன்று மாநிலங்கள் தான் என இருக்கும் சூழலில் கர்நாடகத்தில் கோஷ்டி மோதலில் ஆட்சி அந்தரத்தில் தொங்குகிறது.

44

தமிழகத்தில் இண்டியா கூட்டணில் இருக்கும் திமுக தலைமையிலான தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்டும், அதிக சீட்டுகள் கேட்டும் இல்லையெனில் தவெக கூட்டணிக்கு செல்வதாகவும் பூச்சாண்டி காட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம், தேசிய அளவில் இண்டியா கூட்டணியை விட்டால் திமுக செல்வதற்கு இடமில்லை என காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் இறுமாப்பில் இருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

வெண்டிலேட்டரில், பரிதாப நிலையில் உள்ள காங்கிரஸ் இனியாவது விழித்துக் கொண்டு செயல்படுமா? அல்லது வழக்கம் போல் கோட்டை விட்டுவிட்டு, குறட்டை விடுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories